எளிதாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் 14வது இடத்தை பிடித்துள்ளது
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஆந்திரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018 ஜூலையில் வெளியிடப்பட்ட பட்டியலிலும் ஆந்திரா முதலிடத்தில் இருந்தது. கடந்த முறை 2ஆவது இடத்தில் இருந்த தெலங்கானா இந்த முறை 3ஆம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தை உத்தரப் பிரதேசம் பிடித்துள்ளது. கடந்த முறை 3ஆம் இடத்தில் ஹரியானா இருந்தநிலையில், இந்த முறை தெலங்கானா அந்த இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
கட்டுமான அனுமதி, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள், சுற்றுச்சூழல் பதிவுகள், தகவல் தொடர்பு வழிகள், நிலம் கிடைப்பது மற்றும் ஒற்றைச் சாளர முறை அனுமதி ஆகியவை அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் 14வது இடத்தை பிடித்துள்ளது