தினமும் காலை 7 மணிக்கு நாகர்பாவியின் குக்கிராமத்தில் உள்ள 30 குழந்தைகளுக்கு திறந்தவெளியில் வைத்து பாடம் சொல்லித் தருகிறார் 30 வயது காவலர்.

இவர் பெங்களூரு முதல் டெல்லிவரை பயணிக்கும்போது என்னென்ன மாநிலங்களைக் கடந்துவருகிறீர்கள், வாழ்க்கைப்பாடம், பொது அறிவு மற்றும் கணிதம் போன்ற அனைத்தையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துவருகிறார் அன்னப்பூர்னேஷ்வரி நகரின் துணை ஆய்வாளர் சாந்தப்பா ஜடெம்னவர்.

இவருடைய பணி தினமும் காலை 8.30 மணிக்கு தொடங்குவதால், காலை 7 மணியிலிருந்து 1 மணிநேரம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இங்கு பயிலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு டிவி, ஸ்மார்போன், இணையவசதி, மின்சார வசதிகூட இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை. சிலரிடம் ஸ்மார்ட்போன் இருந்தாலும், இந்த ஊர்களுக்கு சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களால், மாணவர்களை தொடர்புகொள்ள முடிவதில்லை என்கிறார் சாந்தப்பா.

image

இவர் வகுப்பு எடுக்கும் இடத்தை கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் நேற்று பார்வையிட்டுள்ளார். இதனால் இந்த குழந்தைகளின் கல்விக்கு புதுவழிப் பிறக்கும் என அவர் நம்பிக்கை பிறந்துள்ளதாக சாந்தப்பா கூறுகிறார். சிலர் குழந்தைகளுக்கு பேனா, பென்சில் மற்றும் புத்தகப்பைகளை வாங்குவதற்காக உதவியுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.

தினமும் வீட்டுப்பாடங்களை முடித்துவரும் குழந்தைகளுக்கு சாக்லெட் மற்றும் ஜாமெண்ட்ரி பாக்ஸ்களை பரிசாக வழங்கிவருகிறார். மேலும் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி அவர்கள் குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் இருப்பிடங்களுக்கே சென்று கேட்டுக்கொண்டதாக சாந்தப்பா கூறுகிறார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.