வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்திலுள்ள சியாங்ஃபென் கவுண்டி பகுதியில் விருந்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

image  

இந்த உணவகத்தில் மொத்தம் 45 பேர்  இருந்தனர். அவர்களில் 17 பேர் இறந்ததாகவும், ஏழு பேர் பலத்த காயமடைந்ததாகவும் மேலும் 21 பேர் குறைவான  காயங்களுடன் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மீட்பு நடவடிக்கையில் 700 பேர் ஈடுபட்டதாக  மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேரழிவின் காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், கட்டடம் இடிந்து விழும் கொடிய கட்டுமான விபத்துகள் சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல. நாட்டின் விரைவான வளர்ச்சியைக் கட்டியெழுப்புவதற்காக பாதுகாப்பு விதிகளை பொதுவாக மீறி கட்டடங்கள் கட்டப்படுவதாக  சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.