இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசின் அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம்….

ஊரடங்கு
  • இந்தியாவில் செப்டம்பர் 30 வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

  • மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள் சென்றுவர முழு அனுமதி உண்டு. இ-பாஸ் மாதிரியான சிறப்பு அனுமதி தேவையில்லை.

  • செப்டம்பர் 21-ம் தேதி முதல் பொதுக்கூட்டங்கள், கலாசார நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி உண்டு.

வகுப்பு
  • செப்டம்பர் 30-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது

  • கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது

  • கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாத இடங்களில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கலாம். கட்டாயம் கிடையாது.

  • திறந்த வெளி திரையரங்கம் செப்டம்பர் 21-ம் தேதி முதல் செயல்பட அனுமதி உண்டு

  • திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் செப்டம்பர் மாதத்திலும் செயல்பட அனுமதி கிடையாது.

ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கும் திரையரங்கு
  • மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் உள்ளூர் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது

  • நோய்க் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் கூடாது, உள்ளிட்ட உத்தரவுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் மாநில அரசு தரப்பில் இருந்து அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.