ஜப்பானில் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தின் நடுவே ஒரு விவசாயக் குடும்பம் 100 ஆண்டுகளுக்குமேலாக விவசாயம் செய்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீறிப்பாயும் விமானங்கள், காதைக் கிழிக்கும் சத்தங்கள், விமான அறிவிப்புகள் போன்றவற்றின் இடையே விவசாயம் செய்வது என்பது சாதாரணமானதல்ல. ஆனால், ஜப்பானின் இரண்டாவது பரபரப்பான சர்வதேச விமான நிலையமான நரிட்டாவில் தகாவோ ஷிட்டோ விவசாயம் செய்து வருகிறார்.
அதன், அருகிலேயே ஐந்து குடும்பங்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில், இவர் மட்டும்தான் விவசாயி. விமான சத்தத்தில் எப்போதும் அவதியுற்றவர் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார். காரணம், கொரோனாவால் விமானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.