உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணங்களில் மிகச்சிறந்த அனுபவமாக துபாயில் நடந்துவரும் பாலைவனப் பயணத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. முதல் ஐந்து சிறந்த சுற்றுலா அனுபவங்களில் அந்தப் பயணமே முதலிடம் பெற்றுள்ளதாக டிரிப்அட்வைசர் என்ற சர்வதேச நிறுவனம் அறிவித்துள்ளது.

image

ஐக்கிய அரபு நாடுகளில் பாலைவனப் பகுதியில் ஒட்டகம் மற்றும் காரில் செல்லும் பயணங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலியின் ப்ளாரன்ஸ் நகரம், நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரங்கள் வருகின்றன.

image

கடந்த 12 மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயணிகளிடம் கருத்துக்களைக் கேட்டு டிரிப்அட்வைசர் நிறுவனம் சிறந்த பயண அனுபவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.