மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜி உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு அவரது மகன் மற்றும் மகள் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர்,பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து பிராணப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி அவரது ட்விட்டர்பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பிரணாப் முகர்ஜி சிகிச்சைப் பெற்று வரும் ராணுவ மருத்துவமனை தரப்பில் இருந்து, அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ளது.