விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலையை நிறுவவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறிய வழிப்பாட்டு தலங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் வழிப்பாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.