கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உத்தர பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளது என்பதை உறுதிபடுத்தியுள்ளார். கடந்த வாரம், பா.ஜ. க ஆளும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கும் கொரோனா தொற்று உறுதியாகிருந்துதந்து குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்று பாஸிட்டிவ் வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தின் என்னுடன் தொடர்புகொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.