சர்வதேச விமானச் சேவைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

image

மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.