கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்துவிட்டதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் “அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஜூலை 8 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலுமாக குணமாகி இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.