சாத்தான்குளம் விவகாரத்தில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி முதல் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை வரும் நாளை வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

image

இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் மதுரை ஆத்திக்குளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவலர் முத்துராஜை நேற்று இரவு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வந்து தற்போது மீண்டும் 5 பேரிடமும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இன்று 5 பேரையும் சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.