ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ”அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம்,
தருமபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

image

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு.

image

மத்திய கிழக்கு வங்க கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி லட்சத் தீவு பகுதி, கடலோர கர்நாடகா மகாராஷ்டிரா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.