செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் அதிகபட்சமாக 242 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.

image

தமிழகத்தில் இன்று மட்டும் 37,309 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 4,163 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 82,324 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 46,105 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 64 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மற்ற மாவட்டங்களின் நிலவரத்தை காணலாம்.

image

அரியலூர் – 5, செங்கல்பட்டு – 242, கோவை – 43, கடலூர் – 13, தருமபுரி – 15, திண்டுக்கல் – 8, ஈரோடு – 15, கள்ளக்குறிச்சி – 82, காஞ்சிபுரம் – 61, கன்னியாகுமரி – 105, கரூர் – 5, கிருஷ்ணகிரி – 2, மதுரை – 192, நாகை – 7, நாமக்கல் – 2, நீலகிரி – 10, பெரம்பலூர் – 1, புதுக்கோட்டை – 36, ராமநாதபுரம் – 85, ராணிப்பேட்டை – 13, சேலம் – 127, சிவகங்கை – 42, தென்காசி – 9, தஞ்சை – 47, தேனி – 108, திருப்பத்தூர் – 31, திருவள்ளூர் – 219, திருவண்ணாமலை – 103, திருவாரூர் – 27, தூத்துக்குடி – 195, நெல்லை – 145, திருப்பூர் – 24, திருச்சி – 109, வேலூர் – 140, விழுப்புரம் – 41, விருதுநகர் – 143 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர வெளிநாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 19, உள்நாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு : மொத்தம் 64 பேர் மரணம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.