கோவையில் ஊஞ்சல் துணி கழுத்து இறுக்கியும், 2 அடுக்கு கட்டில் மேலிருந்து பென்சிலை பிடிக்க தவறி விழுந்தும் 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் நீலிகோணம்பாளையம் பகுதியில் வசிக்கும் அருள்ஞான ஜோஸ் என்பவரின் 9 வயது மகள் ஜெர்லின் நேகா (9). இவர் ஊஞ்சல் கட்டும் செயினில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துணி கழுத்தை இறுக்க சம்பவ இடத்திலேயே சிறுமி மயக்கமாகியுள்ளார். உடனே அவரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

image

இதுபோன்று எதிர்பாராத விதமாக மற்றொரு 9 வயது சிறுமியும் கோவையில் இறந்துள்ளார். கோவை ஒண்டிப்புதூர் சாமியார் மேடை பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் என்பவரின் 9 வயது மகள் பவதாரணி. இவர் இரண்டு அடுக்கு கட்டிலில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கும் போது, பென்சில் தவறிக் கீழே விழுந்துள்ளது.

image

பென்சிலை பிடிக்க முயன்ற சிறுமி கட்டில் மேலிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த சோதனையாக இருந்தாலும் இந்தியா மீண்டு வரும் என்பது வரலாறு: பிரதமர் மோடி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.