மும்பையில் அம்பேத்கர் வசித்த வீடானது மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
மும்பையில் அம்பேத்கர் வசித்த வீடான ‘ராஜ்கிருஹா’மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அடையாளர் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் கற்கள் கொண்டு வீசி ஜன்னல் கதவுகள், வீட்டின் சிசிடிவிகளை சேதப்படுத்தியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்திவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறும்போது, இந்த விஷயத்தில் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். அம்பேத்கர் வசித்த வீடு சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அலுவலக சீனியர் பெயரில் பேக் ஐடி.. அதன் மூலம் பண மோசடி – டெல்லி சம்பவம்!