கோவையிலிருந்து இருந்து கேரளாவிற்கு ரூ.1.25 கோடி ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்கள் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இந்த வாகனங்களை கேரளா போலீசார் முழுமையாக சோதனை செய்து வருகின்றனர்.

image

அதன் ஒரு பகுதியாக இன்று கோவையிலிருந்து கேரளா சென்ற வாகனத்தை சோதனை செய்ததில், வாகனத்தில் ஹவாலா பணம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் மிதுன் குஞ்சு ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர்.

image

பின்னர் பாலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அவர்களை அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் எங்கிருந்து இந்த பணத்தை கடத்தி வந்தனர் ? யாரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றனர் ? உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறையாத கொரோனா மரணங்கள்.. தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.