கொரோனா வைரஸை பரப்பி சீனா ஒட்டு மொத்த உலகிற்கே பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என தொடக்கம் முதலே அதிபர் ட்ரம்ப் விமர்சித்து வருகிறார். இந்தச் சூழலில் கொரோனா என்ற கொடிய வைரஸை பரப்பி அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கே சீனா பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக ட்ரம்ப் சாடியுள்ளார். வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை சீனா மறைப்பதாக குறை கூறிய ட்ரம்ப், இந்த பேரழிவிற்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தினார்.
கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? ஆய்வு செய்யும் உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே, இதற்கு காரணம் சீனா தான் என அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு தொடர்ச்சியாக சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.