வெளிநாட்டிலிருந்து வந்த மகனுக்கு கொரோனா தொற்று இருப்பதால், மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்து புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது கருடமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியை சேர்ந்த ஒரு தம்பதியரின் மகன் (34) சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். பொது முடக்கத்தால் கடந்த ஜுன் 15 ம் தேதி மதுரை விமான நிலையத்திலிருந்து வந்த அவரை திருச்சி சேதுராப்பட்டி முகாமில் தங்க வைத்து கடந்த 22-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
“சாத்தான்குளம் விவகாரம் லாக்கப் மரணம் கிடையாது”- அமைச்சர் கடம்பூர் ராஜூ
பரிசோதனை முடிவில் 24-ம் தேதி வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்ததால் அன்றைய தினமே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனால் மனமுடைந்த அவரின் பெற்றோர் வீட்டிலிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மகன் மீதுள்ள பாசத்தினாலும், கொரோனா வைரஸ் தொற்று குறித்த போதிய புரிதல் இல்லாததாலும் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர் என்பது மனவேதனையாக இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.