திருச்சியில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால், காவல்நிலைய போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழக்கு தொடர்பாக விசாரிக்க போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்தனர். அந்த வாலிபரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப்பெண் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

image

முசிறி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண்ணின் கணவரான வாலிபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து முசிறி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் போலீசார் ஆகியோருக்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் காவல் நிலையத்திற்குள் வெளிநபர்கள் அனுமதிக்கபடவில்லை.

image

அத்துடன் காவல் நிலையத்தை சேர்ந்த 36 போலீசாரும் தனியார் திருமண மண்டபத்தில் 3 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முசிறி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சீனாவுக்கு 1.27 கோடி கிலோவாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.