ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரான பழனிக்கு காய்ச்சல் இருந்ததால் கடந்த 13-ஆம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது மனைவிக்கும், மகளுக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பழனி இன்று சுவாசப் பயிற்சிகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.