புதுக்கோட்டையில் செய்தியாளரை தாக்கியதாக அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நடுபட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை போலீசார் தஞ்சாவூரிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 7 மணல் லாரிகளை பறிமுதல் செய்னர். பின்னர் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து லாரிகளை ஓட்டி வந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

image

இந்நிலையில் மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டதற்காக கந்தர்வகோட்டையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தமிழ்ச்செல்வன் என்பவரை, நேற்று இரவு அதிமுக இளைஞர் பாசறை ஒன்றிய துணைச் செயலாளர் அருண்பிரசாத் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

image

இதனையடுத்து காயமடைந்த தமிழ்ச்செல்வன், தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அருண் பிரசாத் மீது புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்று கந்தர்வகோட்டை போலீசார் அருண் பிரசாத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை : 2 மாதங்களில் 155 செவிலியர்களுக்கு கொரோனா..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.