கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி இருக்கிறதா என கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சென்னை புழல் அடுத்த காவாங்கரையை சேர்ந்த 26 வயது நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு கடந்த 2-ஆம் தேதி புழல் மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 5-ஆம் தேதி இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சந்தேகமடைந்த கர்ப்பிணி பெண் 5-ஆம் தேதி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். தனியார் ஆய்வக முடிவில் இவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என முடிவுகள் வெளியானதால் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
மனநிலை மாறுபாடுடன் பிடிபட்ட சிறுத்தை : வனத்துறை தீவிர சிகிச்சை
இதற்கிடையே கர்ப்பிணிப் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை சுகாதாரத்துறையினர் மீட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சேர்த்தனர். நிறைமாத கர்ப்பிணி பெண் இருவேறு பரிசோதனை முடிவுகளால் தமக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். பரிசோதனை முடிவுகளில் தவறு நடந்துள்ளதா அல்லது வேறு நபரின் முடிவுகள் தவறுதலாக மாறிவிட்டதா என புரியாமல் கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.