அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

image

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும்  வடக்கு வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் இது வரும் 3-ம் தேதி குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரையை ஒட்டி செல்லும் என்றும் இந்த வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.