திமுகவை அச்சுறுத்த நினைத்தால் அது நடக்காது என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கொரோனாவுக்காக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுக அமைப்பு செயலாளர் அண்ணன் #RSBharathi கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கோவையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது பற்றி நேற்று ஆர்.எஸ்.பாரதி அவர்கள் புகார் அளித்திருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். 1/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 23, 2020
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “திமுக அமைப்பு செயலாளர் அண்ணன் #RSBharathi கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கோவையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது பற்றி நேற்று ஆர்.எஸ்.பாரதி அவர்கள் புகார் அளித்திருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுகவை அச்சுறுத்த நினைத்தால், அது நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.