முடித்திருந்த நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களைத் திறப்பதற்கான தடையை மே 31 ஆம் தேதிவரை நீடித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் இன்று இரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்தன. 
 
Image 
 
இதனிடையே இன்று நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் நாடு முழுவதும் பச்சை மண்டலம், ஆரஞ்சு மண்டலம் மற்றும் சிகப்பு மண்டலத்திற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாநில  மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலங்களிலும் முடித் திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களைத் திறப்பதற்கான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 
 
image
 
இந்நிலையில் சலூன் கடைகள், அழகு நிலையங்களைத் திறக்க விதித்த தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்தக் கடைகளைத் திறக்க உள்ள தடையை  மே 31 ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. 
 
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.