உம்பன் புயல் மிக அதி தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தென்கிழக்கு வங்க கடலில் உருவான உம்பன் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஒடிஷாவில் இருந்து தென் திசையில் 1000 கிமீ தொலைவிலும் மேற்கு வங்கத்தில் இருந்து 1160 தெற்கு தென்மேற்கு திசையிலும் அமைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரம் தீவிர புயலாக மாறும். பின் அதி தீவிர புயலாக மாற உள்ளது. வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வட கிழக்கு திசையில் நகரும்”எனத் தெரிவித்துள்ளது.