கேரளாாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

image

இந்தியா முழுவதும் இதுவரை 42,533 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1373 பேர் கொரோனா நோய் தொற்றால் பலியாகி இருக்கின்றனர். மேலும் இந்த நோயிலிருந்து 11,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பச்சை, சிவப்பு, ஆரஞ்ச் மண்டலங்களுக்கு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மூலமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அம்மாநிலத்தில் புதிதாக நோய் தொற்றுப் பகுதி எதவும் கண்டறியப்படவில்லை, இப்போது சமநிலைக்கு கிட்டதட்ட வந்துவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் இதுவரை 499 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 463 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இப்போது மருத்துவமனைகளில் 34 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.