ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளதாக அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிலியட் சயின்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரெம்டெசிவிர் முதன்முதலில் எபோலாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுப்பதன் மூலம் அவர்களின் சிகிச்சை கால அளவு 15 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் – மீட்க அரசுக்கு கோரிக்கை
ஆயிரத்து 63 பேரை கொண்டு அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. அவர்களில் சிலருக்கு மட்டும் ரெம்டெசிவிர் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வேறு சில மருந்துகள் வழங்கப்பட்டன.
புதிய வழிகாட்டுதல்கள் மே-4 முதல் அமல்படுத்தப்படும் – மத்திய உள்துறை அமைச்சகம்
இந்தியாவில் 33,000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு
இந்த ஆய்வில் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் குணமடையாத விகிதம் 8 சதவீதமாகவும் வேறு சில மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களின் குணமடையாத விகிதல் 11.6 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்தது. ஆனால் ரெம்டெசிவர், முதல் மருத்துவ பரிசோதனை முயற்சியில் தோல்வியை சந்தித்ததாக சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.