பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அன்றைய தினம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி கடந்த மாதம் 20ஆம் தேதி முதன்முதலாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு கடந்த 11ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசித்தார். வருகிற 27ஆம் தேதி முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவிருப்பது மூன்றாவது முறையாகும்.
குணமடைந்த நபருக்கு 70 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா – சீனாவில் அதிர்ச்சி..!
ஏற்கெனவே கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே போனதால் மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் எந்த தளர்வுகளும் கிடையாது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி நடக்கவுள்ள காணொலி காட்சி வாயிலான ஆலோசனையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.