24 மணிநேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு பாசிட்டிவ்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10,363 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

இதில் 8,988 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 339 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 பேருக்குப் புதிதாக இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு நாள்களில் வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில், பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் இன்று காலை 10 மணிக்கு உரையாற்ற இருக்கிறார். ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கொரோனா சாவைத் தடுக்கும் போராட்டத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ இடம் கொடுக்கலாமா?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.