சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயதான மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நெல்லூரில் சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் 10 நாட்களுக்கு முன்னர் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

image

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரது மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.

image

அத்துடன் மருத்துவரின் டிரைவர் மற்றும் 2 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் நெல்லூரிலேயே சிகிச்சையில் உள்ளனர்.

ஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஐஏஎஸ் அதிகாரி – குவியும் பாராட்டு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.