பீனிக்ஸ் மாலுக்குச் சென்ற தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது
ஐரோப்பிய பயணத்தால் வந்த வினை?: சவுதி மன்னர் குடும்பத்துக்கும் கொரோனா தொற்று?
கொரோனா தொற்று அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூர்: கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா..?
சென்னை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்குச் சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மருத்துவ பரிசோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்ற ஒரு தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் ஒரே நாளில் 96 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அதில் இந்த இருவரும் அடங்குவர்.