கொரோனா வைரஸ் காரணமாக, இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை ரத்து செய்யும் திட்டம் இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
“எனக்காக இன்னும் ஒரு உலகக் கோப்பை இருக்கிறது” – மனம் திறந்த உத்தப்பா
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பாண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
“ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் தொலைக்காட்சியிலாவது பார்க்கலாம்” ஹர்பஜன் சிங் !
உலகக் கோப்பை தொடர் தொடங்க பல மாதங்கள் உள்ளதால், அதை ரத்து செய்வதை அல்லது ஒத்தி வைப்பதை குறித்து ஆலோசிக்கப்படவில்லை என உலகக்கோப்பையின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே தெரிவித்துள்ளார். இருபது ஓவர் உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டால், அந்த காலக் கட்டத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.