சாதி, மத வேறுபாடுகளை விட்டுவிட்டு எல்லோரும் ஒன்றுபட கொரோனா பாதிப்பு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனாவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரே பொதுவான நோக்கம், நாம் எல்லோரும் மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே இந்திய மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக உள்ளது. இரக்கம், மற்றவர்கள் மீதான அக்கறை மற்றும் தியாகம் ஆகியவை இந்த எண்ணத்தின் மையமாகும். ஒன்றாக இருந்து நாம் இந்த போரில் வெற்றி பெறுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்து மற்றும் முஸ்லீம் அடையாளங்களுடன் கூடிய இரண்டு சிறுவர்கள் ஒற்றுமையுடன் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் மத ரீதியிலான விஷயங்கள் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வரும் நிலையில், பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா சாதி, மதம் பார்த்து வருவதில்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ராகுல் காந்தியும் சாதி, மத வேற்றுமைகளை விட்டுவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


எம்பிக்களின் சம்பளத்தில் 30% குறைப்பு – மத்திய அரசு அதிரடி முடிவு 


 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.