1. இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரதமர் மோடி. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துவார் என எதிர்பார்ப்பு.
2. ஊரடங்கை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
3. தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்ததால் கண்காணிப்பு தீவிரம்.
நாட்டுமக்களிடையே இன்று மீண்டும் பேசவுள்ள பிரதமர் மோடி: என்ன பேச வாய்ப்பு?
4. கொரோனா பாதிப்புகளை சமாளிக்க மாநிலங்களுக்கான நிதியை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும். பிரதமர் மோடி உடனான காணொலி ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
5. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது. நாடு முழுவதும் 156 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்.
6. கொரோனாவை எதிர்கொள்ள 7 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி உதவி். பெருந்தொற்று நோயை சமாளிக்க இந்தியாவுக்கு உலக வங்கி ஆதரவுக்கரம்.
கொரோனா வைரஸ் நோயாளி வருகையால் அலார்ட் : தனிமைப்படுத்தப்பட்ட வங்கி, ஏடிஎம்..!
7. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு; 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.
8. பிரிட்டனில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆயிரத்தை நெருங்குவதால் மக்கள் அச்சம். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு
திட்டம்.