ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கரூரில் எளிமையான முறையில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்ற திருமணம்.
கரூரைச் சேர்ந்த பிரபாகரன் – அருளரசி ஆகியோரின் திருமணம் இன்று புகழியூர் கண்டியம்மன் கோயிலில் நடைபெறயிருந்தது. இதற்காக பத்திரிக்கை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்திருந்தனர். ஆனால், இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திருமணத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் திருமணத்தை ஒத்தி வைக்கவும் முடியாமல், திருமணத்திற்கு அழைத்தவர்கள் அனைவரையும் வர வேண்டாம் என செய்தி அனுப்பினர். பின்னர் அரசு அறிவுத்தலின்படி, இரு குடும்பத்தை சேர்ந்த இருபது பேர் மட்டுமே பங்கேற்க, நிச்சயிக்கப்பட்ட கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருவள்ளுவர் படத்திற்கு முன்பாக திருக்குறள் நெறிப்படியும், தமிழ்முறைப்படியும் திருமணம் நடந்து முடிந்தது.
‘கொரோனா அச்சம் எங்களை வாட்டுகிறது’: கோவாவில் தவிக்கும் தமிழக மீன்பிடி தொழிலாளர்கள்
திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த அனைவரும் கைகளை சோப்பால் கழுவிய பின்னர் கோயிலுக்குள் நுழைந்தனர். பின்னர் திருமணம் முடிந்து செல்லும் போது மீண்டும் சோப்பால் கைகளை கழுவிக்கொண்டு சென்றனர்.