ஊரடங்கு உத்தரவிற்காக என்னை மன்னித்து விடுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

image 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1000-ஐ தாண்டியுள்ளது. முன்னதாக கொரோனாவை தடுக்கும் விதத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தினார். இதனால் ஏழை மக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

image

முடங்கிய மக்கள்… உயர்ந்தது காற்றின் தரம்.. சாலைகளில் ஜாலியாக உலா வரும் விலங்குகள்..!

இந்நிலையில் வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி “ இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது கோபமாக இருப்பதையும் நான் அறிவேன். ஆனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த இதுபோன்ற தவிர்க்க முடியாத கட்டுப்பாடுகள் அவசியம். விதிகளை மீறி வீடுகளில் இருந்து வெளியே வரும் சிலரால் நாம் கொரோனா வைரஸ் ஆபத்தில்  இருந்து தப்ப முடியாது. அவர்கள் மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றனர்”. என்று அவர் பேசியுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.