உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த வல்லமை பொருந்திய நாடான அமெரிக்காவும் கடுமையாக போராடி வருகிறது. அங்கு 1500க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோர் உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 345 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நோய் தொற்றின் மையமாக நியூயார்க் நகரம் மாறியுள்ளது. அங்கு பத்தில் 9 பேர் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க மருத்துவமனைகளில் செயற்கை சுவாச கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு நோயளிகளுக்கு ஒரு செயற்கை சுவாச கருவியை பயன்படுத்தக் கூடிய சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள GM மற்றும் FORD நிறுவனங்கள் சுவாசக் கருவியை போதுமான அளவு உற்பத்தி செய்ய தவறுவதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
நியூயார்க் நகருக்கு மட்டுமே சுமார் 40 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் தற்போது தேவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடி தேவையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கை சுவாசக் கருவிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என ட்ரம்ப் அந்நாட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா எதிர்ப்பு சக்தியை கண்டறியும் முறை