கேரளாவில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906ஆக உள்ளது. அதில் 83பேர் குணமடைந்துள்ள நிலையில் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.

image

இந்தியாவில் கேரளாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 176 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 12 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் முதியவர் ஒருவர் கேரளாவில் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் கேரளாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும்.

69வயதான முதியவர் கேரள மாநிலம் கொச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி குட்டப்பன் உறுதி படுத்தியுள்ளார்.

வலியால் துடித்த கர்ப்பிணி; ஓடி வந்து உதவிய காவலர்: குவியும் பாராட்டு!!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.