காங்கோ நாட்டில் எரிமலையின் கோரதாண்டவம்: வீடுகளை இழந்து மக்கள் தவிப்பு
காங்கோ நாட்டில் எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். காங்கோ நாட்டில் சுமார் 20ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை, தற்போது வெடித்துச் சிதறியதில் நிலைகுலைந்துள்ளது கோமா நகரம். கிழக்கு காங்கோ பகுதியிலுள்ள நியிராகோங்கோ எரிமலை யாரும் எதிர்பாராத விதமாக இரு தினங்களுக்கு முன்னர் திடீரென வெடித்துச் சிதறியது. அருகே உள்ள 17 கிராமங்களுக்குள் நெருப்புக் குழம்பையும், புகையையும் கக்கியது. எரிமலை வெடிப்பு குறித்து…