உடல்நலக் குறைவு: டோமினிகா மருத்துவமனையில் மெஹூல் சோக்சி அனுமதி
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் மெஹூல் சோக்சி டோமினிகா நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து தப்பிய மெஹூல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வந்தார். இந்த நிலையில் அங்கிருந்து திடீரென தலைமறைவான மெஹூல் சோக்சி டோமினிகாவில் சிக்கினார். அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. கடந்த சில நாள்களாக மெஹூல் சோக்சியை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப ஆன்டிகுவா அரசாங்கம் தீவிரம்…