புதன், வெள்ளி, பூமியை சூரியன் விழுங்கும்! எப்போது? – ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சூரியன் முழுவதும் எரிந்து தனது சக்தியை இழக்கும்போது புதன், வெள்ளி மற்றும் பூமி ஆகிய கோள்களை அது விழுங்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் உயிர்களின் ஆதாரம் சூரியன். இது பூமியில் பல்வேறு உயிரினங்கள் செழித்து வளர அவசியமான ஒளி மற்றும் வெப்பத்தை வழங்குகிறது. ஆனால் இந்த சூரியன் தனது அனைத்து எரிபொருளையும் எரித்து முடித்த பின் என்னவாக மாறும்? என்று விஞ்ஞானிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தன்னில் இருக்கும் அனைத்து…