தருமபுரி: `பட்டா நிலத்தை இலவசமா எழுதி தரணும்’- மறுத்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை அமைக்க இலவசமாக நிலம் தர மறுத்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது. ஜக்கசமுத்திரம் அருகே உள்ள முருக்கல்நத்தம் கிராமத்தில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வுசெய்த அதிகாரிகள், சாலை அமைக்க கோரும் இடம் பட்டா நிலம் என்று கூறியுள்ளனர். அதனை அரசின் பெயருக்கு மாற்றி கொடுத்தால் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராமத்தில் உள்ள முக்கிய…