ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி உற்பத்தியை ஏன் நிறுத்தகூடாது? – நீதிமன்றம் கேள்வி
ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் நெகிழி பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உறுபத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் சீனிவாசன் ஆஜராகி, “நெகிழி பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த…