‘எனக்கு இது கஷ்டமான காலக்கட்டம், ஆனாலும்…’ – வெற்றிக்குப் பின் வெங்கடேஷ் ஐயர் உருக்கம்
கடந்த சில போட்டிகளில் நீக்கப்பட்டப்பின் மீண்டும் களமிறங்கி அணியின் வெற்றிக்கு பங்களித்த கொல்கத்தா அணி வீரரான வெங்கடேஷ் ஐயர், போட்டி முடிந்தப்பின் அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் சூப்பர் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளநிலையில், ஒவ்வொரு அணியும் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது. கடந்த சீசனில் பிரகாசித்த பல வீரர்கள் இந்தாண்டு சீசனில் பெரிதாக விளையாடவில்லை. அந்தவகையில்,…