பாகிஸ்தான் தோல்வி: கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் செய்தியாளரின் செல்போனை பறித்த ரமீஸ் ராஜா
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பத்திரிகையாளரின் செல்போனை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் விஸ்வரூப வெற்றி பெற்று 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இந்த போட்டியில்…