கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி தொடக்கம்!
குஜராத் மாநிலத்தில் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் அக்டோபர் 12ஆம் தேதி வரை போட்டிகள் களைகட்டவுள்ளன. இதன் தொடக்கவிழா அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி தேசிய விளையாட்டுப் போட்டியின் சின்னத்துடன் வாகனத்தில் சென்றார். பின்னர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றி கலைஞர்கள் அசத்தினர். லேசர் ஒளிவண்ணத்தில்…