‘இறுதிப் போட்டியில் எந்த அணி வந்தாலும் வீழ்த்த தயார்’ – பாக். கேப்டன் பாபர் அசாம் உறுதி
இறுதிப் போட்டியில் எந்த அணி வந்தாலும் வீழ்த்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணி 13 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. கடைசியாக அந்த அணி 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு நுழைந்து…