செங்கோட்டைக்குள் விவசாயிகள் செல்லும்வரை போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது? : ராகுல் கேள்வி
போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய மத்திய அரசு அவர்களை தாக்குகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் அழித்து வருகிறது. அரசாங்கம் விவசாயிகளுடன் பேச வேண்டும் மற்றும் ஒரு தீர்வுக்கு வர வேண்டும். இதற்கு ஒரே தீர்வு சட்டங்களை ரத்து செய்து அவற்றை குப்பைக்கூடையில் வீசுவதுதான். விவசாயிகளுடன் பேசுவதற்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கும் பதிலாக அரசாங்கம்…